×

கொரோனா சமூக பரவலாக மாறவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 56,021 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ெகாரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த மருந்து இல்லாத நிலையில் 56 ஆயிரம் பேரை குணப்படுத்தி உள்ளோம். நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் நோய் இல்லாதவர்களுக்கு உள்ளிட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இணை நோய்கள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவலாக உள்ளது.

தமிழகத்தில் 75 ஆயிரம் படுக்கை வசதி உள்ளது. சென்னையில் கோவிட் ேகர் மையங்களில் 17 ஆயிரத்து 500 படுக்கைகள் உள்ளது. சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துமனைகளில் 5000 ஆயிரம் படுக்கை வசதி உள்ளது. எல்லா நவீன வசதிகளும் அடைங்கிய 750 படுக்கை வசதி கொண்ட சிறப்பு மருத்துவமனை கிண்டியில் தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் இரண்டு நாட்களில் இதை திறந்து வைப்பார். தமிழகத்தில் சமூக பரவல் இல்லை. ஐசிஎம்ஆர் தான் சமூக பரவல் தொடர்பாக அறிவிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Corona ,Minister Vijayabaskar , Corona, socially widespread, has not changed, interviewed by Minister Vijayabaskar
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...