×

5 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு: முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது, ரகூட்டன் கிரிம்ஸன் ஹௌஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் உறிரோஷி மிகிடனி, பி2டபிள்யு நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மரிகோ குரூஸ் மெய்ல்லஸ், சீ லிமிடெட் (ஷாப்பீ) நிறுவனத்தின் தலைவர் மற்றும் குழு முதன்மை செயல் அலுவலர் பாரஸ்ட் லீ, க்யூஓஓ 10 பிரைவேட் லிமிடெட்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஹூ யங்க் பே, ஷாலண்டோ எஸ்ஈ ஹெட்குவாட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரோபர்ட் ஜென்ட்ஸ் ஆகிய 5 முன்னணி மின்னணு வணிக நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Companies Leaders Invite Investment ,Tamil Nadu ,Leading Companies Leaders Invite Investment , 5 Leading Companies, Leaders Invite ,Investment , Tamil Nadu, Letter,CM Edappadi
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...