×

திருக்கழுக்குன்றம் பகுதியில் கர்ப்பிணி உள்பட 7 பேருக்கு கொரோனா

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பகுதிகளில் கர்ப்பிணி பெண் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் வசிக்கும், அணுமின் ஊழியர்கள் உள்பட 5 பேருக்கு  கடந்த 6 நாட்களுக்கு முன் தொடர்ந்து காய்ச்சல், இருமல் இருந்து வந்தது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் நேற்று, 5 பேருக்கும் கொரோனா உறுதியானது. உடனே அவர்கள் 5 பேரும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 2 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 171 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 5807 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மாவட்டம்  முழுவதும் 3014 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 96 பேர் நோய்தொற்றால் சிகிச்சை பலனின்றி இருந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு ஊரடங்கு வரும் 5ம் தேதி வரை அமலில் உள்ளது. ஆனாலும்  தொற்று குறையவில்லலை. செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில்  பணியாற்றும் பெண் காவலருக்கு  நேற்று கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடன் பணியாற்றும் சக போலீசாருக்கு கொரோனா தொற்று  இருக்க வாய்ப்புள்ளதால், அனைவரும் கலக்கத்தில் உள்ளனர். இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பெண் காவலருக்கு கொரோனா ஏற்பட்டதால் காவல் நிலையம் மூடப்படுமா, பொதுமக்கள் புகார் கொடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர். திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் கேளம்பாக்கத்தில் 4, மேலக்கோட்டையூரில் 4, நாவலூர், தண்டலம் ஆகிய கிராமங்களில் தலா 1 எனமொத்தம் 10 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Tags : women , Porcupine, pregnant, corona
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது