×

பாலியல் வன்கொடுமை கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்: அறந்தாங்கி சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கருத்து

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே  உள்ள ஏம்பல் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த நாகூரான்-செல்வி தம்பதியரின் மகளான 7 வயது சிறுமி நேற்று முன்தினம் திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து ஏம்பல் காவல்நிலையத்தில் நேற்று அவர் புகார் அளிக்கவே, சிறுமியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள கண்மாயில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருந்துள்ளன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு கண்மாயில் வீசப்பட்டு இருப்பது உறுதியான நிலையில், அதற்கான காரணம், அவரை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. இதையடுத்து சிறுமியின் சடலம் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பப்பப்பட்டது.

அங்கு சிறுமியின் உடலை உடல்கூராய்வு செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் ஊரை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், சிறுமி வன்கொடுமை கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவியுள்ள அவர்,  மீண்டும் ஒரு சிறுமி! அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது! பெண்கள்-  குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது! இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்!, என கூறியுள்ளார்.


Tags : Affair ,Stalin ,Aranthangi , Sexual Harassment, Aranthangi Girl, Murder, MK Stalin
× RELATED அறந்தாங்கியில் பைக்குகள் மோதிய விபத்தில் சவுண்ட்சர்வீஸ் தொழிலாளி பலி