சென்னை : சென்னை தாம்பரத்தில் கொரோனா வகைப்படுத்துதல் மையம் முதன்முதலாக திறக்கப்பட்டுள்ளது. நெஞ்சகநோய் மருத்துவமனை வளாகத்தில் வகைப்படுத்துதல் மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம்பரம் சானடோரியத்தில் வகைப்படுத்துதல் மையத்தில் 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 100 ஆம்புலன்சில் அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு இ.சி.ஜி. உள்பட 7 ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப்படும். ஆய்வு முடிவுகள் அடிபப்டையில் நோயாளிகளை வகைப்படுத்த இந்த மருத்துவமனை செயல்படும். தாம்பரம் சுற்று வட்டாரத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர் வகைப்படுத்துதல் மையத்துக்கு அழைத்து வரப்படுவர், என்றார்.