தூத்துக்குடி : சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் சாட்சியம் அளித்த பெண்
காவலரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட்டிடம்
சாட்சியம் அளித்த பெண் காவலரின் வீட்டிற்கு 2 காவலர்கள் பாதுகாப்பு
வழங்குகின்றனர். காவலர் ரேவதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது .