மதுரை : தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சி தெரிவித்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை உயர்நீதிமன்ற கிளை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், எனது தந்தைக்கும் சகோதரருக்கும் நடந்து போல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. எங்கள் வழக்கில் சிபிசிஐடி நீதியை நிலை நாட்டியுள்ளது என்றார்.