சென்னை : சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர். சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் நீதிபதிகள் பேசியுள்ளனர். அப்போது தைரியமாக சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெண் காவலரின் பாதுகாப்பு மிக முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.