சென்னை : சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். அத்துடன் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறிவது கடினமாக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.