×

பெருந்துறை கொரோனா சிறப்பு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு..!! போதிய உணவு, குடிநீர் வழங்கப்பட வில்லை புகார்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி கொரோனா சிறப்பு மருத்துவமனையில தனிமைப்படுத்தபட்டவர்களுக்கு போதிய உணவு, குடிநீர் வழங்கப்பட வில்லை என்ற குச்சாட்டு எழுந்துள்ளது. தங்களுடைய குழந்தைகளுக்கு பாலும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு, மருந்துகள் வழங்கப்படவில்லை என்றும் வார்டில் இருப்பவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். உணவு போதிய அளவு இல்லை என்றும் அவர்கள் வீடியோவின் மூலம் புகார் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளை சரியாக கவனிப்பதில்லை என்றும் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளனர். எனவே மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளனர். உணவு மற்றும் மருந்துகளை சரியாக வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். போதிய அளவு உணவும், குழந்தைகளுக்கு பாலும் சரியாக வழங்கப்படாததால் நோயாளிகளும், தனிமைப்படுத்தப்பட்டவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Tags : Coroner ,Special Hospital Complainant , Perundurai Corona Specialty Hospital, Food and Drinking Water
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் டிசம்பர்...