தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்பாக ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சாத்தான்குளம் காவல் நிலைய அலுவலர் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகு ஆய்வாளர் ஸ்ரீதர் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.