×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் கைது

நெல்லை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் அதிகாலை கைது செய்யப்ட்டுள்ளனர். காவலர் முத்துராஜையும் சிபிசிஐடி போலீசார் காலையில் கைது செய்துள்ளனர். எஸ்.ஐ. ரகு கணேஷை தொடர்ந்து மேலும் 3 பேரையும்  சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். எஸ்.ஐ. ரகுகணேஷ் இரவில் கைது செய்து மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர் செய்யபட்டு 15 நாள் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கைது செய்யப்பட்ட 3 காவல்துறை அதிகாரிகளும் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்படுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags : head ,Guard Murugan ,SI ,Sathankulam ,Balakrishnan , SATANGULAM, father and son murder, S.I. Balakrishnan, Chief Guard Murugan, arrested
× RELATED சென்னை மதுரவாயல் அருகே தாக்குதலில்...