×

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்துக்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது: ரஜினி ஆவேசம்

சென்னை: சாத்தான்குளம் வியாபாரிகள் பலியான வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு, போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் அவர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெயராஜின் மனைவி மற்றும் மகளிடம் நடிகர் ரஜினிகாந்த் போனில் பேசி ஆறுதல் கூறினார்.

நேற்று டிவிட்டரில் அறிக்கை ஒன்றை ரஜினி வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது சத்தியமா விடவே கூடாது. இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

Tags : merchants ,Sathankulam ,death ,Rajini , devil, merchants death, cause, rajini, anger
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...