கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். கடந்த 3 மாதங்கள் கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. இதனால் வாகனங்கள் நடமாட்டம் குறைந்தவிட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பருவ மழையால் இடி, மின்னலுடன் மழை பெய்துவருகிறது. இதனால் கோட்டக்கரை சாலை, ரெட்டம்பேடு் சாலை, தபால்தெரு, மேட்டுத்தெரு, கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி.சாலை, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த அடர்த்தியான மரம் கீழே விழுந்துள்ளது. இதனால் மின் கம்பி அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை இரவு நேரங்களில் கடும் அவதிப்படுகின்றனர். சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை உடனே அப்புறப்படுத்தவேண்டும். மின்சாரம் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.