×

அறந்தாங்கி அருகே காணாமல் போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே காணாமல் போன ஏழு வயது சிறுமி தண்ணீர் இல்லாத செடிகள் அடர்ந்த குளத்தில் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகூரான், செல்வி தம்பதி. இவர்களது 7 வயது மகள் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணவில்லை. எங்கு தேடியும் அவர்களது மகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என புகார் அளித்தனர்.

இன்று மாலை சிறுமியின் வீட்டின் பின்னால் தண்ணீர் இல்லாத செடிகள் அடர்ந்த குளத்தில் சிறுமி ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பதைப் பார்த்தவர்கள் உடலை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமியின் தலை மற்றும் முகத்தில் ரத்தக் காயங்கள் இருந்ததாகவும் சிறுமியின் உடல் கிடந்த இடத்தின் அருகே ரத்தம் சிதறி இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையில் ஈடுபட்டார். உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லியதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருவதாகவும் அவருடன் அவரது நண்பர் ஒருவரையும் அழைத்து சென்று விசாரித்து வருவதாகவும் தெரிகிறது.



Tags : Aranthangi Aranthangi , Aranthangi, girl, murder
× RELATED அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை...