×

பிரேசிலில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் தொற்று..: கடந்த 24 மணி நேரத்தில் 33,846 பேர் பாதிப்பு!

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,06,10,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5,14,468 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் பிரேசிலில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரேசிலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 14,08,485 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 59,656 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 7,90,040 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Brazil , Brazil, Corona, infected
× RELATED பிரேசிலில் கோர விபத்து: விமானம்...