×

சென்னையில் ஒரே குடும்பத்தை சூறையாடிய கொரோனா: தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் மனவளர்ச்சி குன்றிய மகன் பெற்றோரை இழந்து தவிப்பு!!!

சென்னை: சென்னையில் ஒரே குடுமத்தை சூறையாடிய கொரோனா தொற்றால், பெற்றோர் இருவரும் உயிரிழந்துள்ள நிலையில், மனவளர்ச்சி குன்றிய மகன் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கேவிபி கார்டனை சேர்ந்த 62 வயதான ஏ.கே அருணாசலம் புலவர் மட்டுமல்ல. அவர் மிகசிறந்த சமூக ஆர்வலரும் கூட. உதவும் கைகள் என்ற அமைப்பின் கீழ் கண்பார்வை இழந்தோருக்கும், ஆதரவற்றோருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை அவர் செய்து வந்தார். இந்நிலையில், கண்பார்வை குறைவுடைய இவருக்கு கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அருணாசலத்தின் மனைவி கீதா மற்றும் மனவளர்ச்சி குன்றிய 26 வயது மகன் மணியிக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பெற்றோர் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தடுத்து இருவரும் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் உயிரிழந்தனர். இந்நிலையில் மகன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சுயமாக இயங்க இயலாத வாலிப மகனை பெற்றோர் இருவரும் கண்ணியில் வைத்து இமைபோல் காத்து வந்தனர்.

ஆனால், இப்பொது பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் அந்த வாலிபக்  குழந்தை. மாற்று திறனாளியும் அவரது மனைவியும் கொரோனாவிற்கு உயிரிழந்தது தெரியாமல் மனவளர்ச்சி குன்றிய அவர்களின் மகன் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அந்த மகன் விரைவில் குணமடைய வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பிராத்தனை செய்து வருகின்றனர்.

Tags : Chennai ,parents , Coronation of a single family in Chennai: A depressed son loses his parents
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...