சென்னை: வாடகை வாகன உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாடகை உரிமையாளர்கள் நிவாரணம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாடகை வாகன உரிமையாளர் சங்க செயலாளர் ஜூடு மேத்யூ வழக்கு தொடர்ந்திருந்தார். வாடகை வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனருக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்க மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.