காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. இதில், ஒரு வாரமாக வெயிலும், மேகமூட்டமும் என மாறிமாறி இருந்தது. கடந்த 24ம் தேதி திடீரென பலத்த மழை பெய்ததால் காஞ்சியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பலத்த சூறைக் காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் காஞ்சிபுரத்தில் பல இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. காமாட்சி அம்மன் கோயில் தெற்கு கோபுரம் எதிரே பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவு நீர் வெளியேறியது. இதனால் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், கடும் சிரமம் அடைந்ததுடன், முகத்தை சுளித்தபடி சென்றனர்.