×

கொரோனாவை கட்டுப்படுத்த டிரோன் மூலம் இயற்கை கிருமிநாசினி தெளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கெமிக்கல் இல்லாத இயற்கை கிருமி நாசினியை டிரோன் மூலம் தெளிக்கும் முறையை டிஐஜி தேன்மொழி தொடங்கி வைத்தார். சென்னை சிட்டி சன்ஸ் போரம், சுகர்தனா நிறுவனம், தக்சா ஆள் இல்லாத விமான நிறுவனம் ஆகியவை இணைந்து காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், டிரோன் மூலம் கெமிக்கல் கலக்காத இயற்கை கிருமிநாசினியை தெளிக்கும் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி டிரோன் விமானத்தில் இயற்கை கிருமிநாசினியை ஊற்றி, அதன் இயக்கத்தை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் சப் கலெக்டர் சரவணன், எஸ்பி சாமுண்டீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சுகர்தனா அமைப்பின் இயக்குநர் கார்த்திக் நாராயணன், தக்சா ஆள் இல்லாத விமானத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ராம்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Corona, control, drone, natural disinfectant, spray
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி