×

2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரின் பிஜ்பிஹெரா பகுதியில் கடந்த வெள்ளியன்று சாலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் மற்றும் 6 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் அனந்த்நாக் மாவட்டத்தின் வாக்ஹாமா பகுதியில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து வீரர்கள் அங்கு விரைந்தனர். அப்போது நடந்த துப்பாக் கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் கடந்த வெள்ளியன்று நடந்த வீரர், 6 வயது சிறுவன் உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜாகீத் தாஸ் என்பவனை தேடும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : terrorists , 2 terrorists, shot dead
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...