×

சமோசா தொண்டையில் சிக்கி புத்த துறவி பலி

கார்வார்: சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது தொண்டையில் சமோசா சிக்கியதால் புத்தமத இளம் துறவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடகாவின் வடகனரா மாவட்டம் கார்வார் அருகே உள்ள முண்டகோடு நகரில் திபெத்திய முகாம் உள்ளது. இங்கு ஏராளமான புத்தமத துறவிகள் தங்கி உள்ளனர். இந்த முகாமின் ஒரு பகுதியில் கோமங் விருந்தினர் மாளிகை உள்ளது. அங்குள்ள அறை எண் 2ல் மங்கோலியா நாட்டை சேர்ந்த புத்தமத இளம் துறவி பாயர் ஜவக்லான் தங்கி இருந்தார். அவருக்கு நேற்று காலையில் உணவு வழங்கப்பட்டது. அவர் தட்டில் இருந்த சமோசாவை எடுத்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சமோசாவின் ஒரு துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் அவரால் மூச்சு விட முடியவில்லை. மூச்சு திணறல் ஏற்பட்டதில் அவர்  சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முண்டகோடு  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம் துறவி  ஒருவர் சமோசா சாப்பிடும்போது உயிரிழந்த சம்பவம் திபெத்திய முகாமில் இதர துறவிகள் மத்தியில் சோக அலைகளை ஏற்படுத்தியது.

Tags : monk ,Samosa , Samosa, throat, stuck, Buddhist monk, kills
× RELATED சமோசாவை பார்த்ததும் பிரசாரத்தை மறந்த ஜெயக்குமார்