×

சென்னையில் வரும் 5ம்தேதி வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் வரும் 5ம் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, ஏழை ஏளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு இலவசமாக 30.6.2020 வரை வழங்கப்பட்டு வந்தது. சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும்  மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு 19.6.2020 முதல் 30.6.2020 வரை அமல்படுத்தப்பட்டதால், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்க  உத்தரவிட்டிருந்தேன்.

இந்த பகுதிகளில் 5.7.2020 வரை தீவிர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன். இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமையல் செய்து உணவை, இலவசமாக தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவும் ஆணையிட்டுள்ளேன்.  இந்த நடைமுறை ஜூலை 1 முதல் முதல் ஜூலை 7 வரை செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : mom restaurants ,Chennai ,CM , Madam Restaurant, Free Food, CM till 5 pm
× RELATED நோயாளி இதயத்தில் சிக்கிய மருத்துவ...