×

ஜூலை 31 வரை பார்சல் ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக பார்சல் ரயில் சேவை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரடங்கு நீட்டிப்பால் கீழ்க்கண்ட சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் வரையில் இயக்கப்படும் ரயில் (00657), திருவனந்தபுரம்-எழும்பூர் வரை இயக்கப்படும் ரயில் (00658), சென்ட்ரல்-எர்ணாகுளம் வரையில் இயக்கப்படும் ரயில் (00653), எர்ணாகுளம்- சென்ட்ரல் இடையிலான ரயில் (00654) வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் இந்த சிறப்பு பார்சல் ரயில்களின் சேவையானது ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Southern Railway ,announcement , Until July 31, Parcel Railway Service, Extension, Southern Railway
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...