×

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் மருத்துவ கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலத்தில் இருந்து பரிக்கல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் அருகில் சாலையின் பக்கவாட்டு தடுப்பையொட்டிய பள்ளத்தில் நேற்று மருத்துவ கழிவுகள் மற்றும் ஊசிகள் உள்ளிட்ட ஏராளமான மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச் சென்றுள்ளனர். இதனால் இந்த வழியாக சென்ற பொதுமக்கள் அச்சத்துடன் இதனை பார்த்து சென்றனர்.

சிறுவர்கள், கால்நடைகள் மேய்ப்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் செல்லும் சாலையின் அருகில் இந்த மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஊசிகள் மற்றும் மருத்துவ கழிவுகளை பொதுமக்கள் செல்லும் சாலையோரம் கொட்டி சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து மருத்துவ கழிவுகளையும் உடனடியாக அகற்றிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : roadside ,Ulundurpet ,roadside dumpers , Ulundurpet, medical waste
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...