×

கோவையில் அதிகரிக்கும் பாலியல் தொல்லை குற்றங்கள்.: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கோவை: துப்புரவு வாகன ஓட்டுநரின் பாலியல் தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகள், இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆசைவார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வீட்டில் அடைத்து வைத்து ஒரு கும்பல் கொடுமைப்படுத்தியது.

மேலும் பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்தும் அந்த கும்பல் பெண்களை மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளது. அந்த கும்பலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இது போல கோவை மாவட்டத்தில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டே உள்ளது. போலீசாரும் தக்க நடவடிக்கை எடுத்து வந்தாலும் இது போன்று பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் குறையவில்லை.

இதனையடுத்து கோவை அருகே உள்ள இருகூர் பேரூராட்சியில் துப்புரவு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் ராஜதுரை(55). பேரூராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக உள்ள பெண்ணுக்கு ராஜதுரை பாலியல் தொல்லை தந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராஜதுரையின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டி சென்றுள்ளது. இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் விஷம் குடித்த தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Sexual Harassment Crimes ,Goa ,Teenager , ,expression ,sexual harassment , teenager ,attempted suicide,
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...