×

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், தேனி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு மாலை நேரத்தில் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 36 டிகிரி, குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோவையில் உள்ள சின்னக்கல்லாரில் 19 செ.மீ. மழையும், சின்கோனா 14செ.மீ, வால்பாறை 13 செ.மீ மழையம் பதிவாகியுள்ளது. மேலும் புதுக்கோட்டை, திருவாரூரில் உள்ள குடவாசல் ஆகிய இரு பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Thunderstorms ,Northern ,districts ,Weather Center , Thunderstorms, northern ,coastal, Tamil Nadu,Weather Center ,
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...