×

கோவையில் 16 வயது சிறுவனை எஸ்.ஐ. தாக்கிய விவகாரம்: 2 வாரங்களுக்குள் பதிலளிக்க கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: கோவையில் 16 வயது சிறுவனை எஸ்.ஐ தாக்கிய விவகாரத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி உணவு கடை நடத்தி வருபவர் வேல்மயில். இவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் இரவு உணவு கடை நடத்திய நிலையில், ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்லமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகன சாவியை பிடுங்கி கொண்ட மாணவர், கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த செல்லமணி பைக்கில் இருந்து இறங்கி, அந்தச் சிறுவனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அருகில் இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரியும், சிறுவனை லத்தியால் தாக்கியுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த சிறுவனின் பெற்றோர், போலீஸிடமிருந்து தம் மகனை பாதுகாக்க, கதறி அழுதனர். இதுதொடர்பாக, சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸாருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை ஆணைய உறுப்பினர் மோகன்தாஸ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் 16 வயது சிறுவனை போலீஸ் தாக்கிய விவகாரத்தில் ஆணையத்துக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்; உங்களது பதிலை தபால் மூலம் தவறாமல் தெரிவிக்க வேண்டும். இதில் ஏதேனும் தவறு நடந்தால் ஆணையம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Commissioner ,Human Rights Commission ,SI attack ,Kovil , Coimbatore, boy, SI, Human Rights Commission, notice
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை...