மதுரை : போலீஸ் காவலில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிஐ எடுக்கும்வரை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான குழு வழக்கு விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.ஆவணங்களை டி.எஸ்.பி. அனில் குமாரிடம் ஒப்படைப்பது பற்றிய உத்தரவு சிறிது நேரத்தில் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.