மதுரை: தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை டி.ஐ,ஜி. அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மதியம் 12 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்தது அதிர்ச்சியளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. டி.ஐ.ஜி. ஒருவர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.