சென்னை : சாத்தான்குளம் போலீசார் நடத்திய தாக்குதலில் 2 வியாபாரிகள் மரணம் அடைந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து டிஜிபி திரிபாதியின் பரிந்துரையை ஏற்று வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், அரசாணை பிறப்பித்து நேற்று இரவு உத்தரவிட்டார்.