திருத்தணி: திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர், ஆந்திரா வங்கி ஊழியர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருத்தணி நகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 29 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் உள்பட 3 பேருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் நோய்தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் தனியார் மருத்துவமனையிலும் மற்ற இருவர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.