×

காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி உட்பட 3 தீவிரவாதிள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று காலை மத்திய ரிசர்வ் படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் இரண்டு பேர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இதில் ஒருவன் மாவட்ட கமாண்டர் ஆவான். மற்றொருவன் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் மசூத்.

மசூத்தை பாலியல் பலாத்கார வழக்கு உள்ளிட்டவற்றில் தேடப்பட்டு வந்த குற்றவாளி. மாயமான இவன், பின்னர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தான். தோடா மாவட்டத்தில் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் களையெடுத்த நிலையில் மசூத் மட்டுமே தலைமறைவாக இருந்து வந்தான். இந்நிலையில் நேற்று மசூத் என்கவுன்டரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து தீவிரவாதிகள் இல்லாத மாவட்டமாக தோடா மாறியுள்ளது.

Tags : militants ,Kashmir , Three terrorist ,shot dead , Kashmir
× RELATED காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது...