* போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை : மதுரையில் திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பிய பாஜ நிர்வாகியை தாக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மூர்த்தியை ஜூலை 2 வரை கைது செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பாஜ நிர்வாகியும் மருத்துவருமான சங்கரபாண்டியன் என்பவர் திமுகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். இதையடுத்து மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மூர்த்தி கடந்த 22ம் தேதி சங்கரபாண்டியன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக அவர் மீது மதுரை ஊமச்சிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து விசாரணையை வரும் ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தியை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.