×

சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றி கிடப்பில் போட வேண்டாம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் இது பற்றி கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே. குற்றவாளிகள் மேல் ஐபிசி 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை புலனாய்வு துறையிடம் ஒப்படையுங்கள்.

சிபிஐ விசாரணைக்காக மாற்றப்பட்டு கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து மக்கள் மறந்துவிடுவார்கள் எனக் காத்திராமல் நீதியை காத்திடுங்கள், காலம் தாழ்த்தப்பட்ட நீதி. அநீதி. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Tags : CBI ,Kamal Haasan ,Makkal Needhi Maiyam , punished,Kamalhasan ,Sathankulam case
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...