×

திண்டுக்கல்லில் தள்ளு வண்டியில் மது விற்பனை: கண்டுகொள்ளாத போலீசார்; அதிர்ச்சியில் பொதுமக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தள்ளு வண்டியில் மது விற்பனை படு ஜோராக நடப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்களுக்கு அனுமதியில்லை. இதனால் கடையில் பாட்டில் வாங்கினாலும், அமர்ந்து சாப்பிட இடம் இல்லாமல் ‘குடிமகன்கள்’ அவதிப்பட்டு வருகின்றனர்

இந்நிலையில் திண்டுக்கல் - நத்தம் சாலையில் குள்ளம்பட்டி மெயின் ரோட்டில் நான்கு சக்கர தள்ளுவண்டியில் எவ்வித ஒளிவுமறைவுமின்றி, பட்டப்பகலில் ‘குடிமகன்’களுக்கு படுஜோராக மது விற்பனை செய்யப்படுகிறது. கொஞ்சம் கூடுதல் விலையானாலும் பரவாயில்லை என்று இங்கு ‘சரக்கு’ வாங்கி, அந்த இடத்திலேயே நின்று குடிக்கின்றனர். தள்ளு வண்டியில் மது விற்பனை செய்யப்படுவதை கண்டு, திண்டுக்கல் பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் உள்ளனர். 
‘‘தள்ளுவண்டியில் மது வாங்கி, அங்கேயே குடித்து விட்டு சாலையில் ஆட்டம் போடுகின்றனர். விழுந்து கிடக்கின்றனர்.

போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில் குடிகாரர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பட்டப்பகலில், சாலையிலேயே தள்ளுவண்டியில் வைத்து மதுபானம் விற்பனை செய்வதை போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது’’ என சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


Tags : public ,Dindigul , Dindigul, push cart, liquor sale
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...