×

தொட்டியில் விழுந்த குரங்கை தூக்கில் தொங்கவிடப்பட்ட கொடூரம்...! துடிதுடித்து இறப்பதை கண்டு ரசித்த மனித மிருகங்கள்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தண்ணீர் குடிக்க வந்து வீட்டின் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குரங்கை வீட்டின் உரிமையாளர் அடித்து துன்புறுத்தி, தூக்கில் தொங்கவிடப்பட்டு கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ்வரராவ், அவரது வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் நீர் அருந்த வந்த குரங்கு ஒன்று நிலை தடுமாறி தொட்டிக்குள்ளேயே தவறி விழுந்து தத்தளித்துள்ளது.

இதனை பார்த்த வெங்கடேஷ்வர ராவ், அதனை காப்பாற்றுவதற்கு பதிலாக, கம்புகளால் அடித்து துன்புறுத்தி,  தூக்கு மாட்டி தொங்கவிட்டுள்ளார். துடிதுடித்தபடி துடித்த குரங்கை அங்கிருந்த நாய்களும் கடித்து குதறியுள்ளன. இதனை தொடர்ந்து அந்த குரங்கு பரிதாபமாக உயிரிழந்தது. அப்போது அங்கு வந்த மற்ற குரங்குகள் இறந்துபோன குரங்கை நாய்கள் நெருங்காமல் பாதுகாத்துள்ளன. இதனை கண்ட வெங்கடேஸ்வரராவ் மற்றும் அவரது நண்பர், மேலும் ஒரு குரங்கினை பிடித்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். இதையடுத்து குரங்கின் உடல்களை நாய்களுக்கு உணவாக அவன் வீசி எறிந்துள்ளான்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெங்கடேஸ்வரராவ் மற்றும் அவரது நண்பர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. குரங்கை கொன்று நெருப்பு வைத்து தீவைத்து எரிக்க முயன்றதை இருவரும் ஒப்புக்கொண்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரங்குகள் முன்பு இவ்வாறு ஒரு குரங்கை கொன்றால் மற்ற குரங்குகள் பயந்து வீட்டிற்கு வராது என பக்கத்துவீட்டுக்காரர் கூறியதை கேட்டு, இந்த கொடூரத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.

Tags : Human beings , Monkeys, savages, human beings
× RELATED ஆற்றில் குளிக்க வருவோரை குறிவைத்து 6...