சென்னை: சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் வழக்குகள் கிடப்பில் உள்ளன. குற்றவாளிகள் மேல் ஐ.பி.சி. 302 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து புனலாய்வுத் துறையிடம் ஒப்படைக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.