×

சாதி மறுப்பு திருமணம் செய்த கோவை தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு..! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாதி மறுப்பு திருமணம் செய்த கோவை தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் கார்த்திகேயன்-சக்தி தமிழினி ஆகியோருக்கு கடந்த 5 ம் தேதி திருமணம் நடந்தது. சக்தி தமிழினியை அவரது பெற்றோர் கடத்தியதாக கார்த்திகேயன் புகார் அளித்தார். மனைவியை மீட்டுத்தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். சக்தி தமிழினியை கோவை நீதிமன்றத்தில் ஒரு வாரத்தில் ஆஜர்படுத்த ஆணையிட்டுள்ளது. இ பாஸ் வழங்கவும் காவல்துறைக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Tags : Goa High Court ,Coimbatore , Caste Denial Marriage, Coimbatore Couples, Police Security, High Court
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...