சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கூட்டம் நிறைவுப் பெற்றது. இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக்கூட்டம் 12.15 மணிக்கு நிறைவுப் பெற்றது. மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது.