×

பிரதமரை பற்றி பேசுவதற்கு சிதம்பரத்துக்கு தகுதி இல்லை: பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதர்ராவ் பேச்சு

சென்னை: மத்திய பாஜக அரசின் முதல் ஆண்டு சாதனை விளக்கி அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தமிழக பாஜகவினர் மத்தியில் காணொலி காட்சி மூலம் பேசியதாவது: முத்ரா வங்கித் திட்டத்தில் ரூபாய் 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 2 கோடி பயனாளிகள் என தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பிரதமரை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. சீனாவிடம் இந்தியாவின் பெரும்பகுதி பறிகொடுக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் என்பதை சிதம்பரம் உணரவேண்டும்.

எல்லையில் நடந்த மோதலில் பலியான இந்திய ராணுவ வீரர்கள் இறப்பிற்கு காரணமான சீனாவிற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். பாஜ ஆட்சி காலத்தில் ஒரு தமிழ் மீனவர்கள் கூட இலங்கை ராணுவத்தால் கொல்லப்படவில்லை. நரேந்மோடி அரசு தமிழர்கள் மீதும் தமிழ் மீனவர்கள் மீதும் மிகப்பெரிய பற்று வைத்திருக்கிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பாஜ தமிழர்களின் நலன் காக்கும் கட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Muralidhar Rao Chidambaram ,Muralidhar Rao ,BJP , Prime Minister, Chidambaram, not qualified, BJP General Secretary Muralidhar Rao
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...