×

இளம் திறமையாளர்களை ஊக்குவிக்க சுஷாந்த் பெயரில் அறக்கட்டளை: குடும்பத்தினர் அறிக்கை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 14ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவரது குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுஷாந்த் சிங்கின் இழப்பு எங்கள் குடும்பத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை எப்போதும் யாராலும் நிரப்ப முடியாது. அவருடைய நினைவாக சுஷாந்த் சிங் அறக்கட்டளையை தொடங்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளோம். திரைப்படம், அறிவியல், விளையாட்டு ஆகிய துறைகளில் உள்ள இளம் திறமைகளை ஊக்குவிக்க உதவுவோம். பாட்னாவில் சுஷாந்த் சிறு வயதில் வசித்த வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும். அவரிடமிருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள், டெலஸ்கோப் உள்ளிட்ட முக்கியமான பொருட்கள் அனைத்தையும் அந்த வீட்டில் ரசிகர்களின் பார்வைக்காக வைத்திருப்போம். அவருடைய இன்ஸ்டகிராம், டிவிட்டர், பேஸ்புக் கணக்குகளை இனிமேல் நாங்கள் நிர்வகிப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Tags : Young Talent, Promote, Sushant Name, Foundation
× RELATED பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட...