சென்னை: போலீசார் தாக்கியதில் பலியான சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்தாருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆறுதல் கூறினர். சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து தாக்கினர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தந்தை, மகன் இருவரும் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனம் குவிந்து வருகிறது.இந்நிலையில் ஜெயராஜின் மனைவி மற்றும் அவரது மகளிடம் நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் பேசினார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் போனில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.