மதுரை: மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு பொருளாதார நடவடிக்கையாக ஊரடங்கை தளர்த்தியதால் வெளிநாடு, வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் சமீபத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக, ரோட்டில் செல்பவர்களை எல்லாம் இழுத்து வந்து பரிசோதனை செய்ய முடியுமா? என்றார்.