×

மதுபானம் பறிமுதல்

பூந்தமல்லி: வளசரவாக்கம் பகுதியில் வாகனங்களில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பதாக வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களை நேற்று போலீசார் மடக்கினர். விசாரணையில், காரம்பாக்கத்தை சேர்ந்த தனஞ்செழியன் (44), இவரது நண்பர்களான ரமேஷ் (46), உதயகுமார் (32) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 250 மதுபாட்டில்கள், ஒரு கார், ஒரு மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Liquor, confiscation
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...