×

கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலி: 8 பேருக்கு தொற்று உறுதி

திருப்போரூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனை, ஓமந்தூரார் தோட்ட சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பாதோர் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். அதன்படி கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 125க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சேர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்தனர். சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த 61 வயதுள்ள நபர், பெரம்பூர் நம்மாழ்வார்பேட்டையைச்சேர்ந்த 79 வயது மதிக்கத்தக்க ஒருவர், வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆகிய நால்வர் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். உயிரிழந்த நால்வரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும் அனைவரும் 60 வயதைக் கடந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே மருத்துவமனையில் பணியாற்றும் இளம்பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதேபோன்று திருப்போரூர் வடக்கு மாடவீதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவருக்கும், திருப்போரூர் ஒன்றியத்தில் 48 வயது தொழிலதிபர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Tags : hospital , Kalamokakam, private hospital, 4 people in a single day, korona kills
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...