×

உதவி கமிஷனர் உட்பட 30 போலீசாருக்கு தொற்று

சென்னை: சென்னையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி, சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனர், தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் மாநகர காவல் துறையில் பணியாற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள்  உட்பட நேற்று ஒரே நாளில் 30 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐஐடி மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவர்களுடன் பணியாற்றிய சக போலீசாரையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags : policemen ,assistant commissioner , Assistant Commissioner, 30 cops, infection
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...