×

ஒடிசாவில் நீர்த்தேக்கத்தில் குளித்த போது முதலை தாக்கி 10 வயது சிறுவன் பலி

ஒடிசா: ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் ஒரு நீர்த்தேக்கத்தில் 10 வயது சிறுவன் முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இரண்டு பள்ளி மாணவர்கள் சிலேரு ஆற்றின் நீர்த்தேக்கத்திற்கு குளிக்கச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுவர்களில் ஒருவரான கைலாஷ் மஜி ஒரு முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது என்று தகவல் அளித்துள்ளான். பின்னர் சில உள்ளூர்வாசிகள் சிறுவனது சிதைந்த உடல் நீர்த்தேக்கத்தில் மிதப்பதைக் கண்டுள்ளனர். நீர்த்தேக்கத்தில் மூன்று முதலைகளை அண்மையில் பார்த்ததாக கிராமவாசிகள் கூறினர். இது இதற்கு முன்னதாக நீர்நிலைக்கு அருகில் சென்ற ஆடுகள் மற்றும் மாடுகளைத் தாக்கியுள்ளது.



Tags : Odisha Odisha , Odisha, crocodile, boy
× RELATED ஒடிசாவில் பயிற்சி விமானம் விபத்து தமிழக விமானி, கேப்டன் பரிதாப பலி