தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த குமரேசனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். குமரேசன் மரணத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தை கைவிடாவிட்டால் தடியடி நடத்தப்படும் என போலீஸ் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.