×

தஞ்சாவூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் உயிரிழப்பு: விழுப்புரத்தில் 18 மாத குழந்தை பலியானதால் சோகம்!

தஞ்சை: தஞ்சையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் மூச்சுத்திணறல்  காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளான். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆண்ட சிறுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமாகியுள்ளது. மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த 18 மாத ஆண் குழந்தை, காய்ச்சல் காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறதியானது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பூக்குளம் கிராமத்தை சேர்ந்த 57 வயது முதியவர் கொரோனா தொற்றால், சிகிச்சை பலனளிக்காமல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதேபோல், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அம்மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Thanjavur Thanjavur , Thanjavur,coronavirus,dies,vizhupuram,baby
× RELATED தஞ்சாவூர் தஞ்சாவூர் அரண்மனை வளாக வவ்வால்களை பாதுகாக்க வேண்டும்